Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கொலை செய்யப்பட்டாரா….? அழுகிய நிலையில் கிடந்த கல்லூரி மாணவரின் உடல்…. கதறி அழுத குடும்பத்தினர்….!!

காணாமல் போன கல்லூரி மாணவர் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள அம்மாபேட்டை ஜோதி தியேட்டர் தெருவில் தர்மலிங்கம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு விஷ்வா(19) என்ற மகன் இருந்துள்ளார். இவர் சேலம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார் . கடந்த 8-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற விஷ்வா நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் விஷ்வாவின் பெற்றோர் அவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனாலும் அவர் கிடைக்காததால் தர்மலிங்கம் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவரை தேடி வந்தனர். இந்நிலையில் பொன்னம்மாபேட்டை ரயில்வே கேட் அருகில் இருக்கும் தனியார் கல்லூரி முட்புதரில் உடல் அழுகிய நிலையில் விஷ்வாவின் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்படி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்த்தபோது விஷ்வாவின் தலை மற்றும் கை பகுதியில் காயங்கள் இருந்தது. இதனால் ரயில் மோதி அவர் இறந்து இருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகப்படுகின்றனர். இதனை அடுத்து விஷ்வாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விஷ்வா ரயிலில் அடிபட்டு இறந்தாரா? அல்லது யாரேனும் கொலை செய்து சடலத்தை முட்புதரில் வீசி சென்றார்களா? என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |