Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

கொலை, கொள்ளைக்கு திட்டம்…. பயங்க ஆயுதங்களுடன் வாலிபர்கள் கைது…. நாமக்கலில் பரபரப்பு….!!

பயங்கர ஆயுதங்களுடன் கொலை மற்றும் கொள்ளைக்கு திட்டம் தீட்டிய 5 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் துணை சூப்பிரண்டு அதிகாரி ராஜரணவீரன் தலைமையில், இன்ஸ்பெக்டர் சுரேஷ்,சப்-இன்ஸ்பெக்டர்கள் கோவிந்தன், யுவராஜ், மற்றும் காவல்துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் பில்லூர் செல்லும் சாலையில் உள்ள காட்டுப்பகுதியில் சந்தேகப்படும்படி ஒரு கார் மற்றும் 2 இருசக்கர வாகனம் நின்று கொண்டிருந்தது. இதனை பார்த்த காவல்துறையினர் அங்கு சென்று பார்த்தபோது 7 பேர் கொண்ட கும்பல் மறைந்து இருந்தது தெரிய வந்துள்ளது.

இதனையடுத்து காவல்துறையினரை பார்த்ததும் அந்த கும்பலில் இருந்த 2 பேர் தப்பியோடிய நிலையில் மற்ற 5 பேரை போலீசார் மடக்கி பிடித்துள்ளனர். இதனைதொடர்ந்து காவல்துறையினர் விசாரித்ததில் பில்லூர் பகுதியை சேர்ந்த விஜயகுமார், ஹேமந்த்குமார், பரமத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த ஸ்டீபன்ராஜ், மதுரை மாவட்டம் விளாங்குடி சேர்ந்த திருப்பதி, கரூர் மாவட்டத்தை சேர்ந்த கோபிநாத் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் காரை சோதனை செய்தபோது அதில் கத்தி, அரிவாள் போன்ற பயங்கர ஆயுதங்கள் இருந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி உள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் பணத்திற்காக படுகொலை செய்வதற்கும், கொள்ளையடிப்பதற்கும் செய்வதற்கு கொள்ளையடிக்கவும் திட்டம் தீட்டியது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அவர்கள் 5 பேர் மீதும் வழக்குபதிவு செய்து கைது செய்த நிலையில் தப்பியோடிய 2 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |