Categories
மாநில செய்திகள்

கொரோனா 2000-க்கு பின் தான் குறையும்… சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பு..!!

தமிழகத்தில் தினசரி பாதிப்பு இரண்டாயிரத்தை தொட்டு பின்னர் தான் குறையும் என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து கொண்டேன் வருகின்றது . இதற்காக தமிழக அரசு பல்வேறு கட்ட முயற்சி நடவடிக்கைகளை செய்து கொண்டு வருகின்றது. முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் தமிழகத்தில் தினசரி பாதிப்பு 2 ஆயிரத்தை தொட்டு பின்னர் மீண்டும் குறையும் என சுகாதாரத்துறை முதன்மை செயலாளர் ஜே ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கிராமங்களில் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட குடியிருப்புகளும், நகரங்களில் 3960 தெருக்களிலும் கொரோனா பாதிப்பு உள்ளது. மொத்தமாக தமிழகத்தில் 512 இடங்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன என்று அவர் தெரிவித்தார்.

Categories

Tech |