Categories
தேசிய செய்திகள்

கொரோனா 2வது அலை… ஒரே நாளில் 3,920 பேர் பாதிப்பு… திணறும் மேற்கு வங்காளம்…!!!

மேற்கு வங்காள மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்தை எட்ட உள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்

மேற்கு வங்காள மாநில சுகாதாரத் துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,920 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் தற்போது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,05,314 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் நேற்று மட்டும் 59 பேர் உயிரிழந்ததை அடுத்து, தற்போது வரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7,294 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலம் முழுவதிலும் 34,566 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதுமட்டுமன்றி தற்போது வரை கொரோனா பாதிப்பிலிருந்து 3,63,454 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

Categories

Tech |