Categories
உலக செய்திகள்

“கொரோனா வைரஸ்”… குணமடைந்தவர்கள் எண்ணிக்கை…. 45.50 கோடியாக அதிகரிப்பு….!!!!!

சீன நாட்டின் வுகான் நகரில் கடந்த 2019ஆம் வருடம் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. இப்போது கொரோனா தாக்கம் 226நாடுகள் மற்றும் பிரதேசங்களுக்கு பரவி அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடந்து வரும் சூழ்நிலையிலும், வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் உலககளவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 50,43,37,880ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 31 லட்சத்து 11 ஆயிரத்து 149 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரையிலும் 45 கோடியே 50 லட்சத்து 4 ஆயிரத்து 821 பேர் குணமடைந்து உள்ளனர். எனினும் கொரோனா வைரசால் உலகம் முழுதும் இதுவரையிலும் 62 லட்சத்து 21 ஆயிரத்து 910 பேர் உயிரிழந்துள்ளனர்.

Categories

Tech |