Categories
மாநில செய்திகள்

கொரோனா விதிமீறல்…. 10 லட்சம் வழக்குகள் வாபஸ்….. டிஜிபி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் விதிமுறைகளை மீறியதாகக் கூறி போடப்பட்ட 10 லட்சம் வழக்குகளை ரத்து செய்வதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. அப்போது ஊரடங்கு உத்தரவை மீறி செயல்பட்டதாக 10 லட்சம் வழக்குகள் போடப்பட்டு இருந்தது.

இந்த வழக்குகளை கைவிடுவதாக கடந்த பிப்ரவரியில் பேரவையில் முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். வழக்குகளை ரத்து செய்வதற்கான அரசாணை கடந்த மாதம் 5ஆம் தேதி வெளியிடப்பட்ட நிலையில் அரசாணைப்படி வழக்குகளை ரத்து செய்ய அறிவுறுத்தி அனைத்து மண்டல காவல் உயரதிகாரிகளுக்கு டிஜிபி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Categories

Tech |