பொதுமக்களின் மருத்துவ காப்பீடு இன்சூரன்ஸ் திட்டத்திற்கான கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பிரச்சனை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக கொரோனா கவாச் என்ற பாலிசி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஏற்படும் செலவுக்கான காப்பீடு திட்டம் ஆகும். இந்த பாலிசியின் மூலமாக ரூபாய் 50 ஆயிரம் முதல் 5 லட்சம் வரை காப்பீடு கிடைக்கும்.
இதற்கான பிரீமியம் தொகை 500 முதல் 6,000 வரை இருக்கும். இந்த திட்டத்திற்கான கால அவகாசம் மார்ச் 31-ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என அறிவிப்பு வெளியாகியிருந்தது. தற்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு இந்த திட்டம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.