Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் இருந்து மீள… இந்தியா கட்டாயம்… இதனை செய்யனும்… ரகுராம் ராஜன் விளக்கம்…!!!

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு மற்றும் குடும்பங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்ட அதிக அளவிலான செலவுகளை செய்ய அரசு தயக்கம் காட்டக்கூடாது.

சர்வதேச பொருளாதார உறவுகளைக்கான ஜி 20 மாநாடு இந்திய ஆராய்ச்சி நிறுவனம் சார்பாக நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பங்கேற்றார். அதில் அவர் பேசும்போது, “கொரோனா ஊரடங்கு மற்றும் பொருளாதார சரிவு காரணமாக சிறு நிறுவனங்கள் மற்றும் குடும்பங்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளன.

அதனை ஈடுகட்ட நிவாரண உதவிகளை வழங்குவதற்கு மத்திய அரசு பெரிய அளவில் செலவு செய்ய தயக்கம் காட்டக்கூடாது. அது மட்டுமன்றி இந்தியா போன்ற வளரும் நாடுகள்,கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டு வருவதற்கு அரசின் செலவுகளை மேலும் அதிகரிக்க வேண்டும்”என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |