Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதித்த தாய், மகன்…. வீட்டிற்கு வைத்து பூட்டு போட்ட உரிமையாளர்..!!

கொரோனா பாதிக்கப்பட்ட காரணத்தால் வீட்டின் உரிமையாளர் தாய் மகன் இருவரையும் வீட்டுக்குள் பூட்டி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆந்திர மாநிலம் குண்டூரில், சட்டெனபள்ளி பகுதியை சார்ந்த 28 வயதுள்ள வாலிபருக்கும் அவரது தாயாருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதை தொடர்ந்து தனது வீட்டு உரிமையாளருடன் அனைவரும் தற்காப்பு நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கூறிவிட்டு வந்து உள்ளார்.  அவரைப் பின்தொடர்ந்து வந்த வீட்டு உரிமையாளர் கொரோனா பாதித்த நபரையும், அவருடைய தாயையும் வீட்டுக்குள் வைத்து பூட்டியுள்ளார்.

அதன் பின் தொற்று பாதித்த நபர் வீடியோ மூலமாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்ததும், விரைந்து வந்த காவலர்கள் தொற்று பாதித்த நபரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி விட்டு வீட்டினுடைய உரிமையாளரை எச்சரித்துள்ளனர். வாடகைக்கு குடியிருப்பவர்கள் அனைவருக்கும் மன உளைச்சலை உள்ளாக்கும் வீட்டு உரிமையாளர்கள் பற்றிய தகவல்களை அரசுக்கு தெரிவிக்குமாறு ஆந்திர காவல்துறை அறிவிப்பு கொடுத்துள்ளது.

Categories

Tech |