Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரவல்: ஜேஇஇ நுழைவுத்தேர்வு ஒத்திவைப்பு…. வெளியான தகவல்…!!!

நாடு முழுவதும் கடந்த வருடம் மார்ச் முதல் கொரோனா கோரத்தாண்டவமாடியது. இதையடுத்து கொரோனா அதிகமாக பரவி வந்ததால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் ஊரடங்கில் தளர்வுகள் கொண்டு வரப்பட்டதால் மீண்டும் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வருகின்றனர். இதற்கு மத்தியில் கொரோனா மீண்டும் வேகமெடுத்து வருகிறது.

மேலும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் பொறியியல் பட்டப்படிப்புக்கான ஜேஇஇ நுழைவுத் தேர்வு வரும் 27, 29 ஆகிய தேதிகளில் தேதிகளில் நடைபெற இருந்தது. இதையடுத்து கொரோனா பரவல் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான  தேதி அறிவிக்கப்படும் என்று தேசிய தேர்வு முகமை  அறிவித்துள்ளது.

Categories

Tech |