சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் வீரஅழகர் கோவிலில் சித்திரை திருவிழா பக்தர்கள் இன்றி தொடங்கியது.
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள மானாமதுரையில் சிறப்பு வாய்ந்த வீர அழகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வருடம்தோறும் திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். இந்த விழாவை முன்னிட்டு சாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருவார். இத்தகைய சிறப்பு வாய்ந்த சித்திரை திருவிழாவை கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அரசு விதிமுறைகளை பின்பற்றி கோவில் வளாகத்திற்குள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி பக்தர்கள் இன்றி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. ஆனால் எதிர்சேவை, சாமி புறப்பாடு, அழகர் ஆற்றில் இறங்குதல் ஆகிய நிகழ்ச்சிகள் கொரோனா வைரஸ் காரணமாக இந்த வருடமும் தடைசெய்யப்பட்டுள்ளது. மேலும் சாமி புறப்பாடு நிகழ்ச்சிகள் கோவில் உள் பிரகாரத்தில் நடத்தப்படுகின்றனர்.