கொரோனா வைரஸை தடுக்கும் நடவடிக்கையின் ஒருபகுதியாக அனைவருக்கும் தடுப்பூசி போடாப்பட்டு வருகிறது. கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்ற வருடம் ஜனவரி 16ம் தேதி முதல் செலுத்தப்படுகிறது. நாடு முழுதும் கொரோனா தடுப்பூசி 200 கோடி டோஸ் என்ற மைல்கல்லை கடந்து சாதனை படைத்திருக்கிறது.
இவ்வாறு 200கோடி டோஸ் தடுப்பூசி போட்டு சாதனை செய்ததற்கு பிரதமர் மோடி அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளார். தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டவர்களை மோடி பாராட்டி கடிதம் எழுதியுள்ளார். அத்துடன் தடுப்பூசி செலுத்தியோருக்கும் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனாவிற்கு எதிரான போரில் மறக்கமுடியாத நாள் அனைவரது பங்களிப்பால் இந்தியாவானது மீண்டும் வரலாறு படைத்திருக்கிறது என அவர் தெரிவித்துளளார்.