Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பு மருந்தை பெற தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் …!!

கொரோனா தடுப்பு மருந்தை பெற பொதுமக்கள் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என பாஜகவின் பீகார் தேர்தல் அறிக்கை குறித்த திரு. ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

கொரோனா தடுப்பு பொருளாதாரச் சரிவு சீனாவுடனான எல்லை பிரச்சினை உள்ளிட்ட பல விவகாரங்களில் திரு. ராகுல் காந்தி மத்திய அரசை தொடர்ந்து கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த வகையில் பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் வென்றால் அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்புப்பூசி வழங்கப்படும் என பாஜக அறிவித்துள்ளது.

உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பெரும் தொற்றை பாஜக அரசியலாக்குகிறது என விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள திரு. ராகுல் காந்தி கொரோனா குறித்த எதிர்காலத் திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனா தடுப்பு மருந்தை பெற பொதுமக்கள் தேர்தல் வரை காத்திருக்க வேண்டும் என அவர் விமர்சித்துள்ளார்.

Categories

Tech |