தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் ஞாயிறு ஊரடங்கு, இரவு ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதால் மருத்துவமனைகளில் கூட இடமில்லாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர்.
தற்போது முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று மாலை 5 மணிக்கு அனைத்துக்கட்சிக் கூட்டத்திற்கு அழைப்புவிடுத்து கடிதம் எழுதியுள்ளார். அதில் கொரோனா தடுப்பு தொடர்பாக அனைத்துக் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார். அனைத்துக்கட்சி கூட்டத்தில் பேசிய முதல்வர், கொரோனா தொடர்பான நடவடிக்கைகளில் தமிழக அரசு வெளிப்படை தன்மையாக இருக்கிறது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்த தேவையான தடுப்பூசியை இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.