கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக இலங்கைக்கு வரும் வெளிநாட்டினர் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அந்த நாட்டின் சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதாவது கொரோனா தடுப்பூசி, கொரோனா நெகடிவ் சான்றிதழ் போன்றவற்றை சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும்.
இது குறித்து இலங்கை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, கொரோனா கட்டுப்பாடுகளை அதிரடியாக நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கை வந்த பின் ஒருவேளை அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால் தனியார் மருத்துவமனை, ஹோட்டல் அல்லது அவர்களது வீட்டிலேயே 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்துதலுக்கான செலவுகளை அவர்களே ஏற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.