Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி…. புதிய கட்டுப்பாடுகள் அமல்…. முதல்வர் அதிரடி உத்தரவு….!!!!

உலகம் முழுவதும் கடந்த 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் கொரோனா கோரத்தாண்டவம் மாறியது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோனது மட்டுமல்லாமல் கடுமையான கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டன. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்து கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டுள்ள நிலையில் சீனா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகின்றது.

இந்தியாவில் கொரோனா அதிகரித்து வருவதைத் தொடர்ந்து கர்நாடக மாநிலத்தின் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி பள்ளி மற்றும் கல்லூரி, திரையரங்குகளில் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உலக அளவில் புதிய வகை பி எஃப் 7 கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக கர்நாடக மாநிலத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் கூட முக கவசம் அணிந்துதான் கலந்து கொள்ள வேண்டும் என்று முதல்வர் பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். மேலும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இரவு ஒரு மணி வரை மட்டுமே அனுமதி என அவர் உத்தரவிட்டுள்ளார். இதனைப் போலவே கடுமையான கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |