Categories
தேசிய செய்திகள்

கொரோனா எதிரொலி: இந்த மாநிலத்தில் 144 தடை உத்தரவு…!!!

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் அதிகமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்த நிலையில் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு மெல்ல மெல்ல திரும்பி வந்தனர். இதற்கு மத்தியில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மீண்டும் கொரோனா வேகம் எடுத்துள்ளது. இதனால் ஒரு சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா பரவலை தடுக்க கோவாவில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி அம்மாநிலத்தில் ஹோலி, ஈஸ்டர், ஈகை திருநாளை பொது இடங்களில் கொண்டாடக் கூடாது எனவும் கோவாவின் உள்ளூர் திருவிழாவான சிக்மோ திருவிழாவும் ரத்து செய்யப்படுகிறது. இந்த விழாக்களை கொண்டாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

Categories

Tech |