Categories
சினிமா

கொரோனா ஊரடங்கு…. 3000 தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்கிய நடிகர் யாஷ்….!!!!

நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறாமல் அனைவரும் வீட்டிலேயே முடங்கி உள்ளனர். அதுமட்டுமல்லாமல் மக்கள் தங்கள் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசும் சில நிதிகளை வழங்கி வருகிறது.

இந்நிலையில் கே ஜி எஃப் படம் மூலம் புகழ்பெற்ற நடிகர் யாஷ் தனது சொந்த பணத்திலிருந்து கன்னட திரை துறையில் பணியாற்றும் சுமார் 3000 தொழிலாளர்களுக்கு தலா 5 ஆயிரம் நிதி உதவி வழங்கியுள்ளார். அதனைப்போலவே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக இருக்கும் ரஜினி, விஜய் மற்றும் அஜித் கஷ்டப்படும் திரைத்துறை தொழிலாளர்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Categories

Tech |