நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக பெரும்பாலான மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் மக்கள் சற்று நிம்மதி அடைந்துள்ளனர். மேலும் நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா இல்லாத கிராமத்தை உருவாக்கினால் முதல் மூன்று கிராம பஞ்சாயத்துகளுக்கு பரிசுகள் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. முதல் பரிசாக 50 லட்சம், இரண்டாவது பரிசாக 25 லட்சம், மூன்றாவது பரிசாக 15 லட்சம் வழங்கப்படும். இதற்காக ரூ.5.4 கோடி ஒதுக்கப்படும். மொத்தம் 18 விருதுகள் வழங்கப்படும். இந்த பரிசுத்தொகை கிராமங்களின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.