நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருவதால், தலைநகர் டெல்லியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் மாநில சுகாதார மந்திரிகளுடன் நடைபெற்ற கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா காணொளி மூலமாக பங்கேற்றார். அப்போது பேசிய அவர், கொரோனா பாதிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. ஒரு சில மாநிலங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், விழிப்புடன் இருப்பது அவசியம். முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்டவற்றை மாநில அரசுகள் மிக தீவிரமாக கண்காணிக்க வேண்டும். மேலும் பள்ளி செல்லும் குழந்தைகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை மாநில அரசுகள் அதிகரிக்க வேண்டும்.
முதியோர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்துவதை துரிதப்படுத்த வேண்டும். விரைவான கொரோனா பரிசோதனை மூலமாக மற்றவர்களுக்கு தொற்று பரவாமல் தடுக்க முடியும். பரவுகிறதா என்பதை மாநில அரசுகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். கொரோனா பரிசோதனை, பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை, தடுப்பூசி மற்றும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஆகிய 5 வழிமுறைகளையும் கட்டாயம் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார்.