இங்கிலாந்தில் வசித்து வரும் 29 வயது இளம்பெண் ஒருவர் தனது கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் கோமாவில் குழந்தையை பெற்றெடுத்த அனுபவத்தை அவர் தற்போது பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தில் வசித்து வரும் 29 வயதாகின்ற Ellie என்பவர் தனது கர்ப்ப காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து தனது குழந்தையை 10 வாரங்களுக்கு முன்னதாகவே அவர் சி பிரிவு மூலம் பெற்றெடுத்துள்ளார். ஆனால் அவர் குழந்தை இந்த மண்ணுலகிற்கு வரும் சமயத்தில் கோமாவிற்கு சென்றுள்ளார்.
அதன் பின்பு 5 வாரங்களுக்குப் பிறகு கோமாவில் இருந்து முழித்த Ellie தனது குழந்தையை அப்போதுதான் பார்த்துள்ளார். இந்நிலையில் அண்மையில் குழந்தையின் முதல் பிறந்த நாளைக் கொண்டாடிய Ellie தனது பிரசவம் குறித்த அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.