Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பச்சிளம் குழந்தை… ஆம்புலன்ஸில் பரிதாபமாக உயிரிழப்பு… கதறி அழுத பெற்றோர்…!!

ஆந்திராவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 1 1/2 வயது குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு ஆம்புலன்ஸில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அச்சுதாபுரம் பகுதியில் உள்ள ஜான்விதா என்ற 1 1/2 வயது குழந்தை ஒரு வாரமாக சளி மற்றும் காய்ச்சலில் அவதிப்பட்டுள்ளது. இதனால் குழந்தையின் பெற்றோர் விசாகப்பட்டினத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் அங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதால் குழந்தையை அனுமதிக்க மறுத்துவிட்டது. இதனையடுத்து ஜான்விதாவிற்கு கொரோனா இருக்கிறதா என சந்தேகம் அடைந்த பெற்றோர் பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.

இதனைத்தொடர்ந்து குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதில் பதற்றமடைந்த பெற்றோர் விசாகப்பட்டினம் கே.ஜி.எச். அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸில் அழைத்து சென்றுள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கூடிய படுக்கைகள் நிரம்பியதால் மற்றொரு ஆக்சிஜன் படுக்கைக்காக குழந்தையும் பெற்றோரும் கிட்டத்தட்ட 2 மணிநேரம் ஆம்புலன்சில் காத்திருந்துள்ளனர். இந்நிலையில் ஜான்விதாவிற்கு மூச்சுத்திணறல் அதிகமடைந்து ஆம்புலன்ஸிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் மனமுடைந்த பெற்றோர் கதறி அழுத காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

Categories

Tech |