சிவகங்கை மாவட்டம் கீழடி அருகில் உள்ள கொந்தகையில் அகழாய்வு நடைபெற்று வருகின்றனர். அதில், கண்டெடுக்கப்பட்ட 134 முதுமக்கள் தாழிகள் ஒவ்வொன்றாக திறக்கப்பட்டு வருகின்றன.இதில் 116, 123 ஆகிய எண்களை கொண்ட முதுமக்கள் தாழிகள் ஆய்வாளர்கள் திறந்தனர்.
அந்த தாழிகளில் மனித மண்டை ஓடு எலும்புகள், சிறிய பானைகள், கிண்ணங்கள், முன்னோர்கள் இறுதிச்சடங்கில் பயன்படுத்திய 20 பொருட்கள் ஆகியவை இருந்தது. இந்த பொருட்கள் டிஎன்ஏ பகுப்பாய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவுகள் கிடைக்கும் போது மேலும் பல்வேறு விவரங்கள் தெரியவரும் என்று ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.