Categories
மாநில செய்திகள்

கொதிக்க கொதிக்க எண்ணெயை தலையில் ஊற்றிய மனைவி… அப்படி கணவர் என்னதான் பண்ணாரு…?

குடிபோதையில் கணவன் தகராறு செய்ததால் கொதிக்க கொதிக்க எண்ணையை தலையில் ஊற்றி மனைவி கணவனை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஏஏஸ் பேட்டையை சேர்ந்த தங்கராஜ் என்பவரின் மனைவி செல்வராணி. இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர். தங்கராஜ் தையல்வேலை பார்த்து வருகிறார். மதுவுக்கு அடிமையான இவர் தினமும் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார். செல்வராணி சாலையில் பலகார கடை நடத்தி வருகிறார். பலகாரம் விற்று அதில் வைத்திருக்கும் காசை எடுத்துக்கொண்டு சென்று மது குடித்து விடுவார். இதன் காரணமாக இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில நாட்களாக தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று கணவன் எப்போதும் போல் குடித்து விட்டு வந்து மனைவியை அடித்து கொடுமைப்படுத்தி உள்ளார்.

ஒரு கட்டத்திற்கு மேல் பொறுத்துக் கொள்ளாத மனைவி பலகாரம் செய்ய வைத்திருந்த கொதிக்கும் எண்ணையை எடுத்து கணவரின் தலை மீது ஊற்றினார். இதில் தங்கராஜ் வலி தாங்க முடியாமல் கதறியுள்ளார். அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரின் மனைவி செல்வராணியை கைது செய்தனர்.

Categories

Tech |