Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கொதிக்கும் எண்ணையில் வடை சுட்ட பக்தர்கள்” சிறப்பாக நடைபெற்ற செடல் உற்சவ விழா….!!!

பிரசித்தி பெற்ற அம்மன் கோவிலில் பக்தர்கள் வினோதமான முறையில் நேர்த்திக்கடன் செலுத்தியுள்ளனர்.

கடலூர் மாவட்டத்தில் உள்ள பில்லிலாலி தொட்டி கிராமத்தில் பிரசித்தி பெற்ற ரேணுகாம்பாள் முத்துமாரி அம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் செடல் உற்சவம் கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக கடந்த இரண்டாம் தேதி தொடங்கியது. இந்த திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சி ஆன செடல் உற்சவம் நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனுக்கு அலகு குத்தி நேர்த்திக் கடன் செலுத்தினர்.

அப்போது வேன் மற்றும் பேருந்து போன்றவைகளை முதுகில் அலகு குத்தி கோவிலுக்கு இழுத்து வந்தனர். இதைத்தொடர்ந்து கொதிக்கும் எண்ணெயில் வெறும் கைகளால் வடை சுட்டு எடுத்தனர். இந்த திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் இன்று அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்று கொடியிறக்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

Categories

Tech |