தமிழகத்தில் வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்ததற்கு அதிமுகவெற்றி பெற பாமக களப்பணி ஆற்றும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று இன்று அறிவிக்கப்பட்டது. அதனால் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்த தேர்தல் பிரசாரம் செய்து வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது.
இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தங்கள் ஆட்சி தமிழகத்தில் அமைந்தால் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை செய்து தருவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கடந்த சில நாட்களாக அதிமுக தமிழகத்தில் மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை தொடர்ந்து செய்து வருகிறது.
இதனையடுத்து அரசு கல்வி நிலையங்களில் வன்னியர்களுக்கு 10.5%உள் இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் எம்பிசி-வி என்ற பிரிவு வன்னியர் களுக்காக ஏற்படுத்தப்பட்டு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வன்னியர்களுக்கான தனி ஒதுக்கீடு தற்காலிகமானது என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
இதனையடுத்து தமிழக அரசு வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு கொடுத்தது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “வன்னியர்களுக்கு இடப்பங்கீடு கொடுத்தார்கள்… அதனால் மீண்டும் ஆட்சிக்கு வந்தார்கள் என்று சொல்லும் வகையில் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக பாட்டாளிகளின் களப்பணி அமைய வேண்டும்” என்ற அவர் பதிவிட்டுள்ளார்.