Categories
அரசியல் மாநில செய்திகள்

கொடநாடு வழக்கு…. கருத்து சொன்ன சரத்குமார்…. ஷாக் ஆன எடப்பாடி…!!!

கோவை போத்தனூர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனைக் கூட்டமானது அக்கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தலைமையில் நடந்தது. அதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது, “லஞ்ச ஒழிப்புத் துறையினர் முன்னாள் அமைச்சர்கள் வீடுகளில் சோதனை செய்துள்ளனர்.

மேலும் அவர்கள் தவறுகள் ஏதும் செய்யாதிருந்தால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. கொடநாடு குறித்து எவ்வித வழக்கும் வேண்டாம் என்ற கருத்தை எதிர்ப்பவன் நான்.  நாட்டின் ஜனநாயகம் விசாரணை ஆகும். வேளாண் சட்டத்திற்கு எதிராக தமிழக அரசானது தீர்மானம் எடுத்துள்ளது. ஒன்றிய அரசு இதை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Categories

Tech |