திரு.கே.மாயத்தேவர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு வேதனையடைந்த இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் :
கழக இடைக்கால பொதுச்செயலாளர், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்களின் இரங்கல் செய்தி :
பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் துவக்கப்பட்ட மிகக் குறுகிய காலத்தில், 1973 ஆம் ஆண்டில் கழகம் முதன்முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவை இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற பெருந்தகையர் திரு. கே. மாயத்தேவர் அவர்கள் மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.
முதல் முதலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற கழகத்தின் மூத்த முன்னோடி திரு மாயத்தேவர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் அமைதி பெற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..
1973, கழகம் முதன்முதலில் சந்தித்த திண்டுக்கல் நாடாளுமன்ற மக்களவை இடைத்தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிட்டு வென்ற பெருந்தகையர் திரு.கே.மாயத்தேவர் அவர்கள் மறைந்த செய்தி கேட்டு ஆற்றொண்ணா துயரம் அடைந்தேன்.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் திரு.@EPSTamilNadu அவர்கள். pic.twitter.com/dp5MnpaoZn
— AIADMK (@AIADMKOfficial) August 9, 2022