அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியைச் சேர்ந்த அரசு சிவில் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டில் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா அரசு ஒப்பந்தங்களை பெறுவதற்கு 40 சதவீதம் கமிஷன் கேட்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்நிலையில் கடந்த ஏப்ரல் 12-ஆம் தேதி சந்தோஷ் பாட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இவர் தன்னுடைய மரணத்திற்கு கே.எஸ். ஈஸ்வரப்பா தான் காரணம் என கடிதம் ஒன்றினை எழுதி வைத்துள்ளார்.
இதனையடுத்து காவல்துறையினர் அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவம் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக கே.எஸ் ஈஸ்வரப்பாவிடம் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு கட்சி நிர்வாகம் வலியுறுத்தியது. எனவே அமைச்சர் கே.எஸ் ஈஸ்வரப்பா தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.