Categories
தேசிய செய்திகள்

கேஸ் சிலிண்டர் விலை குறைகிறதா…? மத்திய அரசின் முக்கிய முடிவு….!!!!!

இந்தியாவில் கேஸ் சிலிண்டர்களின் விலை மிக அதிகரித்திருப்பது பொதுமக்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்தி வருகின்றது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் கேஸ் சிலிண்டர் விலை ஆயிரம் ரூபாய்க்கும் மேல் இருக்கின்றது. இந்த நிலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு தனிக்குழு அமைத்து உத்தரவிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுபற்றி ரைடர்ஸ் வெளியிட்டுள்ள தகவல் படி உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் எரிவாயுவுக்கு விலை நிர்ணயம் செய்யும் முறையை மாற்றலாமா என்பது பற்றி மறு ஆய்வு மேற்கொள்ளும்படி குழு ஒன்றை அமைத்து மத்திய அரசு உத்தரவிட்டிருக்கிறது.

இந்த நிலையில் இந்த குழு தனது பரிந்துரைகளை செப்டம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருப்பதாக ரைட்டர் தகவல் வாயிலாக தெரிவித்துள்ளது. இருப்பினும் எரிவாயு விலை குறையும் வகையில் குழு பரிந்துரை செய்தாலும் கூட உடனடியாக எந்த மாற்றமும் இல்லை. ஏனென்றால் அக்டோபர் மாதம் முதல் அடுத்த எரிவாயு விலை நிர்ணயம் ஆறு மாதங்களுக்கு அமலில் இருக்கும். இந்த நிலையில் குழுவின் பரிந்துரைக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலும் தேவை அதனால் குழுவின் பரிந்துரை சாதகமாக இருந்தாலும் அமலுக்கு வர சில மாதங்கள் ஆகலாம் என தெரிவிக்கப்படுகிறது.

Categories

Tech |