வருகின்ற 9-ஆம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று முதல் வருகின்ற 9-ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனையடுத்து திருவனந்தபுரம், கொல்லம் உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு நாளை சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் 204.5 மி.மீ அளவுக்கு மழை பெய்யும் எனவும் கூறியுள்ளனர்.
அதுபோன்று வேறு சில பகுதிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் மழை பிரதேச பகுதிகள், தாழ்வான பகுதிகள், ஆற்றங்கரை பகுதிகள் போன்ற பகுதிகளில் வசித்து வரும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என மாநில பேரிடர் மேலாண்மை கழகம் அறிவித்துள்ளது.