குமரி வழியாக கேரளாவுக்கு காரில் கடத்த முயன்ற ஒன்றரை டன் ரேசன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தார்கள்.
கன்னியாகுமரி மாவட்டம் வழியாக அடிக்கடி கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகின்றது. இதை தடுக்கும் விதமாக போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்ற நிலையில் களியக்காவிளை காவல் துறையினர் குழித்துறை பழைய பாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்கள்.
அப்பொழுது வேகமாக வந்த காரை மடக்கி பிடித்து சோதனை செய்ததில் 1 1/2 டன் அரிசி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கார் டிரைவரிடம் விசாரணை செய்ததில் இளஞ்சிறை பண்டாரவிளையைச் சேர்ந்த சலீம் என்பதும் ரேஷன் அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக கேரளாவுக்கு கடத்திச் சென்றதும் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து கார் மற்றும் ரேஷன் அரிசியை உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தார்கள்.