கேரளாவில் 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது..
கேரளாவில் தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் அடுத்த 24 மணி நேரத்தில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம் ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை கொல்லம், பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி மாவட்டங்களில் மிக பலத்த கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் இதற்கு முன்னதாக அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால் கடந்த 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் பெய்த கனமழையால் இடுக்கி மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்கள் வெள்ளக்காடாக மாறியது. இதில் இடுக்கி மற்றும் கோட்டையம், மாவட்டங்களில் ஏற்பட்ட நிலச்சரிவில் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.