சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தனியார் நிறுவன ஊழியருக்கு இரண்டரை ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள செல்லனுர் பகுதியில் சரவணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனியார் கேபிள் டிவி நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2020-ஆம் ஆண்டு சரவணன் அதே பகுதியில் வசிக்கும் ஒருவரின் வீட்டு கேபிள் டிவி இணைப்பை சரி செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது வீட்டில் தனியாக இருந்த 9-ஆம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமிக்கு சரவணன் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்த போலீசார் சரவணனை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கோவை சிறப்பு நீதிமன்றம் சரவணனுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், இரண்டரை ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டார்.