ஆரம்ப சுகாதார நிலைய குடோனில் திடீரென தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அடுத்துள்ள பேரையூரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் அங்கு கெமிக்கல், பிளீச்சிங் பவுடன், ஆசிட், கொசு மருந்து மூட்டைகள் உள்ளிட்ட பொருட்கள் அடங்கிய குடோனில் நள்ளிரவு 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்து ஏரிய தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முதுகுளத்தூர், கமுதி தீயணைப்பு வீரர்கள் உடனடியாக தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். இதனையடுத்து சுமார் 1/2 மணி நேரம் போராடி குடோனில் எரிந்த தீயை முழுவதுமாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும் அங்கிருந்த பிளீச்சிங் பவுடர் மூட்டைகளையும் பத்திரமாக அப்புறப்படுத்தியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.