Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கூலித்தொழிலாளி வாகனம் மோதி உயிரிழப்பு…. திட்டமிட்டு நடந்த சம்பவமா….? போலீஸ் விசாரணை….!!

நெல்லையில் வாகனம் மோதி கூலி தொழிலாளி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லைக்கு அடுத்துள்ள பொன்னாக்குடி கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்தார் . கூலித் தொழிலாளியான இவர் எந்தப் பகுதிக்கும் சைக்கிளில் தான் செல்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று கணேசன் சைக்கிளில் சென்று கொண்டிருக்கும் பொழுது , அடையாளம் தெரியாத வாகனம் அவரை பின்புறத்திலிருந்து பலமாக இடித்து தள்ளியுள்ளது.

இதனால் படுகாயமடைந்த கணேசன் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி கணேசன் பரிதாபமாக இறந்து விட்டார். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Categories

Tech |