Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கூட்ட நெரிசலை பயன்படுத்தி…. மர்மநபர் செய்த செயல்…. போலீஸ் விசாரணை….!!

கூட்ட நெரிசலை பயன்படுத்து சிறுமியின் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு சென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் நயினாமரைக்கான் சக்திபுரம் பகுதியில் விஜயகுமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராஜலட்சுமி என்ற மனைவியும் தருணிகா என்ற இரண்டு வயது மகளும் உள்ளனர். இந்நிலையில் ராஜலட்சுமியும், தருணிகாவும் மதுரையில் ஒரு திருமண விழாவிற்கு சென்றுவிட்டு மீண்டும் ராமநாதபுரத்திற்கு திரும்பியுள்ளனர். இதனையடுத்து இராமநாதபுரத்திலிருந்து வீட்டிற்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்துள்ளனர்.

அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி சிறுமியின் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் யாரோ பறித்துள்ளனர். மேலும் சிறுமியின் கழுத்தில் சங்கிலி இல்லாததை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராஜலட்சுமி கேணிக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |