தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி வழங்கப் போவதாக அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இந்த அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கூட்டுறவு சங்க தொழிலாளர்களுக்கான அகவிலைப்படி உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனையடுத்து நியாய விலை கடை ஊழியர்கள் சார்பில் கூட்டுறவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அவர்களுக்கு கோரிக்கை மனு ஒன்று அனுப்பப்பட்டிருந்தது. அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது, கடந்த 2021 ஆம் ஆம் ஆண்டு தமிழக அரசு, அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு கொடுக்கப்படும் என அறிவித்திருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பில் கூட்டுறவு ஊழியர்கள் இடம்பெறவில்லை. இதேபோல் தற்போது அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதிலும் கூட்டுறவு ஊழியர்களுக்கும் உயர்த்தப்படும் என அறிவிக்கவில்லை கூட்டுறவு ஊழியர்களும் அரசு ஊழியர்கள்தான் எங்களுக்கும் ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் அதோடு அகவிலைப்படி நிலுவை தொகையும் வழங்கப்பட வேண்டும்.” எனக் கூறப்பட்டுள்ளது