நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக பெரும்பாலான மாநிலங்களில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்தாலும், கொரோனா முழுமையாகக் கட்டுக்குள் வரும் வரை ஊரடங்கு தொடரும் என மாநில அரசுகள் தெரிவித்து வருகிறது. அதன்படி சில தளர்வுகள் அளிக்கப்பட்டு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தில் ஏற்கனவே ஊரடங்கு சில தளர்வுகள் உடன் அமலில் உள்ள நிலையில் தற்போது ஆகஸ்ட் 15ஆம் தேதி வரை இந்த ஊரடங்கு நீக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது. சுகாதார சேவைகள், சட்டம் ஒழுங்கு மற்றும் அத்தியாவசிய தேவைகளை தவிர மற்ற அனைத்து பணிகளுக்கும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. உடற்பயிற்சி நிலையங்கள், அழகு நிலையங்கள் ஆகியவை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதி. பேருந்துகள், ஆட்டோ மற்றும் டாக்ஸி ஆகியவற்றில் 50% இரு கைகளுடன் பயணிகள் பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் 50 சதவீதம் பணியாளர்களுடன் செயல்படலாம்.