பண்டிகை காலங்களில் பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு திரும்புவார்கள். இதனை பயன்படுத்தி ஆம்னி பேருந்துகளில் அவர்களின் இஷ்டம் போல கட்டணத்தை வசூலிப்பர்கள். இதனால் பயணிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். தமிழகத்தில் பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இந்த கட்டணம் கண்காணிக்கப்படும், கட்டணம் கூடுதலாக இருந்தால் பஸ்கள் பறிமுதல் செய்யப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், ஆம்னி பேருந்துகள் இணையதளங்களில் அதிக கட்டணம் வசூலிப்பது அறிந்தால், கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட பயணியிடம் டிக்கெட் கட்டணத்துடன் மீதியிருக்கும் தொகையும் சேர்த்து வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.