அனைத்து மாநிலங்களிலும் கிராம ஊராட்சிகளை ஒன்றிணைத்து அரசின் சேவைகளை இணையதளம் மூலம் மக்களுக்கு வழங்க ‘பாரத் நெட்’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாட்டில் ரூ. 1230 கோடி மதிப்பில் 12,525 கிராமங்களிலும் இணையவசதி ஏற்படுத்த தமிழ்நாடு அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 12,525 கிராமங்களில் இணைய வசதி தரப்பட இருக்கிறது. அதன்படி தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களிலும் இணைய வசதியை ஏற்படுத்தித் தரும் இந்த திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்க உள்ளார்.