தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பிறகு மக்களுக்கு பல்வேறு திட்டப் பணிகளை சிறப்பாக செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றவுடன் அரசுப் பேருந்துகளில் பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு இலவச பயணம் என தமிழக அரசு அறிவித்தது.
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அரசுப் பேருந்துகளில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணம் செய்யும் திட்டத்தை போக்குவரத்துத்துறை அமைச்சர் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் குழந்தைகள் இலவச பயண திட்டத்தை உடனடியாக அமல்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் அரசுப் பேருந்தில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இலவசமாக பயணிக்கும் திட்டம் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. மேலும் 5 முதல் 12 வயது வரை பாதி கட்டணம் வசூலிக்கப்படும் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு இருக்கை வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டும். மடியில் அமர்ந்து சென்றால் கட்டணம் செலுத்த தேவையில்லை.