Categories
மாநில செய்திகள்

“குஷியோ குஷி”….. தமிழகம் முழுவதும் இன்று முதல் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை….!!!!!

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை இன்று  முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நேற்று முடிவடைந்த  நிலையில் டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ஜனவரி 2ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் அரையாண்டு விடுமுறையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது என பள்ளி கல்வித்துறை எச்சரித்துள்ளது. விடுமுறை குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் பொது தேர்வை சந்திக்கும் மாணவர்களுக்கு அசைன்மென்ட் வழங்கலாம் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |