தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் அரசு பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகிறது. அதன்படி ஜனவரி 31-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் கடந்த 14-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டது.
இந்நிலையில் 5 நாட்களுக்கு பிறகு தமிழகம் முழுவதும் இன்று முதல் அனைத்து வழிபாட்டு தலங்களும் திறக்கப்படுகின்றன. இதனால் பக்தர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.