பிரபல பிரபல வர்த்தக நிறுவனமான flipkart நிறுவனத்தில் ஆன்லைன் மூலமாக பல்வேறு பொருட்களும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மக்களும் தேவையான பொருட்களை வீட்டிலிருந்த படியே பெற்றுக் கொள்கின்றனர். இந்த நிலையில் இந்த நிறுவனம் ஹோட்டல் புக்கிங் சேவையைப் அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. அதன்படி இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் சுமார் 3 லட்சம் ஹோட்டல்களில் புக்கிங் செய்ய முடியும் என்று பிளிப்கார்ட் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பெரிதும் அறியப்படாத தளங்கள், தொழில் பயணங்கள், நீண்ட விடுமுறை என்று சுற்றுலாவில் புதிய ட்ரெண்டுகள் பிரபலமடைந்து வருகின்றன.
சுற்றுலாத்துறையானது கடந்த வருடத்தில் மட்டும் 70% வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த 20 வருடங்களில் 60% மொத்த சராசரி வளர்ச்சி பெற்றுள்ளத. இந்த நிலையில் அடுத்த பண்டிகை காலாண்டு மொத்த சுற்றுலாத்துறைக்கும் நல்ல காலமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே flipkart ஹோட்டல்ஸ் சேவை வாயிலாக வாடிக்கையாளர்களுக்கு மலிவான விலையில் ஹோட்டல் புக்கிங் வழங்கப்படும். எனவே வாடிக்கையாளர்கள் இனி பிளிப்கார்ட் ஆப்பிலேயே ஹோட்டல் புக்கிங் செய்யலாம்.