Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குழந்தை இல்லாத காரணத்தினால்…. விரக்தி அடைந்த இளம் பெண் எடுத்த முடிவு…. போலீஸ் விசாரணை….!!!!

குழந்தை இல்லாத விரக்தியில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்தில் வியாசர்பாடி பகுதியில் விவேக் கவிதா என்ற தம்பதி வசித்து வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்பது ஆண்டுகள் ஆகியும் இதுவரை குழந்தை இல்லை. இந்த காரணத்தினால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இருவருக்கும் இடையில் வழக்கம்போல் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா கணவன் வேலைக்குச் சென்ற பிறகு படுக்கையறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கவிதாவின் இறப்பில் காண காரணம் குறித்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |