இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வைரபுரத்தில் கொத்தனாரான அசோக்(26) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு அசோக் ஷர்மிளா(23) என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு குழந்தை பிறக்கவில்லை. இதனால் மன உளைச்சலில் இருந்த ஷர்மிளா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ஷர்மிளாவின் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த வெள்ளிமேடுபேட்டை காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.