Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

குழந்தை இல்லாததால் ஏற்பட்ட பழக்கம்…. வாலிபர் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடிபழக்கத்தை கைவிடுமாறு தாய் கண்டித்ததால் மனமுடைந்து வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள உரப்புளி செட்டியார் தெருவில் விசுவநாதன் என்ற வாலிபர் வசித்து வந்துள்ளார். கூலி தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றதுள்ளது. இந்நிலையில் இதுவரையிலும் குழந்தை பிறக்காததால் விஸ்வநாதன் மதுபழக்கத்திற்கு அடிமையாகி தினமும் குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

இதனால் விஸ்வநாதனின் தாயார் அவரை கண்டித்துள்ளார். இதனால் மனமுடைந்த விஸ்வநாதன் வீட்டில் அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்துள்ளார். இதனை பார்த்த அவரது உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பரமக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் விஸ்வநாதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தகவலறிந்து சென்ற பரமக்குடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Categories

Tech |