மைதா மாவு – 2 கப்
ரவை – 4 டேபிள்ஸ்பூன்
தயிர் – சிறிதளவு
பச்சை பட்டாணி – 1 கப்
மிளகாய்தூள் – 3 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் – 3 டீஸ்பூன்
சீரகத்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1/4 டீஸ்பூன்
சர்க்கரை – 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் 1 கப் பட்டாணியை மிக்சியில் அரைத்து கொள்ளவும். பின் ஒரு பாத்திரத்தில் 2 கப் மைதா மாவு, 4 டேபிள் ஸ்பூன் ரவை, சிறிதளவு எண்ணெய், உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும்.
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் அரைத்த பட்டாணி கலவையை சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.
பின்பு அதனுடன் மஞ்சள் தூள், கொத்தமல்லி தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், உப்பு, சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
அதனை தொடர்ந்து மாவு கலவையை பூரிகளாக தேய்த்து, அதனுள் பச்சை பட்டாணி கலவையை வைத்து மூடி எண்ணெயில் போட்டு பொரித்தெடுத்தால் சூப்பரான பட்டாணி ஸ்டஃப்டு பூரி ரெடி.