இயற்கை நமக்கு அளித்த பொக்கிஷங்கள் போதுமானது :
1.வசம்பு
2.கடுக்காய்
3.மாசிக்காய்
4சித்தரத்தை
5.ஜாதிக்காய்
6.சுக்கு
7.மஞ்சள்
எப்படி உபயோகபடுத்துவதுனு பாக்கலாமா?
இவைகளை ஒரு கப் தண்ணீரில் அல்லது தாய்ப்பாலில் கொதிக்கவிடவும் .அரை கப் அளவு தண்ணீரை வற்ற வைத்து அதில் உள்ள மருந்துகளை நிழலில் உலர்த்தி எடுத்து வைக்கவேண்டும் .
பின்னர் அந்த மருந்துகளை உரைக்கல்லில் தண்ணீர் விட்டு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.ஒவ்வொரு மருந்தையும் இரண்டு முதல் பதினைந்து முறை வரை உரை கல்லில் உரசி கொள்ளலாம் .(வசம்பை தவிர )
உரைத்து எடுத்த மருந்தை பாலாடையில் விட்டு மேலும் தண்ணீர் அல்லது தாய்ப்பால் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கலாம் .
எப்போது கொடுக்கவேண்டும் என்று தெரியுமா உங்களுக்கு ?
குழந்தையை குளிக்க வைத்தவுடன் கொடுப்பது வழக்கமாகும் .
ஒரு நாள்விட்டு மறுநாள் கொடுக்கலாம் .
குழந்தையின் இரண்டு முதல் மூன்று வயது வரை கொடுக்கலாம் .